தாய்மை அப்படித்தான்...



பிரசவம்

நரம்புகள் புடைத்து; இடுப்பு எலும்பு கழண்டு;
கண்களில் நீர் தெறித்து; அலறலில் குரல் கிழிந்து;
உச்சபட்ச வலியில் மரணத்தின் உச்சத்தை தொட்டு;


செத்தேவிட்டோமென்று செல்கள்  அழுது;
இனி ஒரு பிள்ளை வேண்டாமென்று
ஆங்காரத்தில் சிந்தனை உடைந்து;
செவியின் சவ்வுகள் ஆக்ரோஷத்தில் அடைத்து;

சிறுதுளையைப் பிய்த்து;
அடிவயிறு மரண பீதியில் மாய்ந்து;
குடல்கள் சுருட்டி; விழிகள் இருட்டி;
வியர்வை பூத்து; இமைகள் வியர்த்து;

மெல்லிய குரலில் ஒர் அழுகையைக் கேட்க;
இருதயமது அன்னிச்சையாய் இளகி விட;
பிசு பிசு என்று ஒரு உடல் என்னிடம் வர;

வலியெல்லாம் மறந்து; களைப்பெல்லாம் களைந்து;
உள்ளமது பூரித்து; முகம் முழுவதும் மகிழ்ச்சியில் நான்;


No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.