இரண்டு வருட செயல்பாட்டிற்கு பிறகு, சமீபத்தில் எனது முதல் சுயதொழில் நிறுவனத்தை மூடிவிட முடிவு செய்தேன். எங்கே, என்ன தவறு நடந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுகொள்வது அதைவிட முக்கியம். அப்படி நான் கற்றுக்கொண்ட பாடங்களின் சுருக்கம் இதோ:
1. தயாரிப்பில் கவனம் செலுத்துங்கள்
விற்பனையும், நிதி மேலாண்மையும்தான் என்னுடைய பிரதான வேலைகளாக இருந்தன. என்னுடையது டெக்னாலஜி தொடர்பான நிறுவனமாய் இருந்தாலும், என்னால் வெளியிலிருந்து தேவையானவற்றை வாங்கியிருக்க முடியும். உங்களை போன்றே ஆர்வமுடைய ஒரு முதன்மை தொழில்நுட்ப அதிகாரியை உங்களோடு வைத்துகொள்வது நிறையவே பலனளிக்கும். அதுவும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு இதில் நிறையவே லாபம்.
2. ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு போதுமான நிதி கிடைத்தால் நீங்கள் விரைவாக செயல்பட தொடங்குவீர்கள். நீங்கள் முதலில் வேலைக்கு எடுக்கும் ஊழியர்கள் முக்கியமானவர்கள். உங்கள் நிறுவனம் பற்றிய புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். காரணம், நாளை உங்கள் முயற்சி தோற்றால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.
3. பண விஷயத்தில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள்
பணம் முக்கியம்தான். ஆனால் எந்நேரமும் நீங்கள் முதலீட்டைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் உங்கள் தயாரிப்பு வீணாய்ப் போகும். நான் நிதியை பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் என் தயாரிப்பு பாழாய் போவதை தடுக்க முடியவில்லை.
4. திறமையானவர்களை வேலைக்கு அமர்த்துங்கள்
நண்பர்கள், உறவினர்களை பழக்கத்திற்காக வேலைக்கு எடுக்காமல், திறமையானவர்களை வேலைக்கு எடுங்கள். திறமை தவிர்த்து உங்களுக்கு நம்பிக்கையானவர்களையும் வேலைக்கு எடுங்கள். சமயங்களில் திறமையைவிட நம்பிக்கையே கைகொடுக்கும்.
5. சிக்கனமாய் இருங்கள்
நிதி குவிந்தவுடன் கண்டபடி செலவு செய்யும் நிறுவங்களை நான் பார்த்திருக்கிறேன். வேலைக்கு ஆட்கள் எடுப்பது, தொழிநுட்ப ரீதியாக வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு செலவு செய்வது நியாயம்தான். ஆனால், வீண் ஆடம்பர செலவுகள் உங்கள் நிறுவனத்தை பாதிக்கும்.
6. கொள்கைகளை தளர்த்த தயாராய் இருங்கள்
சுயதொழிலின் முக்கிய பலமே உங்களால் நீங்கள் விரும்பியவற்றை செய்யமுடியும் என்பதுதான். அதனால், கொண்ட கொள்கைகளையே பிடித்துத் தொங்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுங்கள்.
7. எல்லாவற்றையும் நிறுத்தத் தயாராய் இருங்கள்
நிறைய பேர் தங்களின் நிறுவனங்களோடு உணர்ச்சிவசப்பட்டு நெருங்கிவிடுவார்கள். அது தவறு. உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது எனத் தோன்றினால் தயங்காமல் நிறுவனத்தை மூடிவிடுங்கள். அது பெரிய புதைகுழியில் நீங்கள் விழுவதை தடுக்கும்.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.